Monday, December 31, 2007

107.அருகிலிவ ளருகிலிவ ளருகில்

விவேக சிந்தாமணி
********************
107.அருகிலிவ ளருகிலிவ ளருகில்வர வுருகுங்
கரியகுழல் மேனியிவள் கானமயில் சாயல்

பெரியதன மிடைசிறிது பேதையிவ ளையோ

தெருவிலிவ ணின்றநிலை தெய்வமென லாமே.


கரிய நிறங்கொண்ட கூந்தலையும், அழகிய மேனியையும், கானமயில் போன்ற சாயலையும், புடைத்துப் பெருத்த தனங்களையும், சிறுத்த இடையும் உள்ள மங்கை அருகில் வர மனம் உருகும். வீதியில் இவள் நிற்கும்போது பார்த்தால் தெய்வப்பெண்ணோ என மயங்கிச் சொல்லுதல் வேண்டும்.

இதுவும் இடைச் செருகலே.

0 Comments: