Monday, December 31, 2007

108.அலகு வாள்விழி யாயிழை

விவேக சிந்தாமணி
************************
108.அலகு வாள்விழி யாயிழை நன்னுதற்
றிலகங் கண்டெதிர் செஞ்சிலை மாரனும்

கலகமே செய்யுங் கண்ணிது வாமென

மலரம் பைந்தையும் வைத்து வணங்கினான்.


கூர்மையான வாள்போலும் கண்ணை உடைய தலைவியின் எடுப்பான நெற்றியில் உள்ள பொட்டின் அழகை, அழகிய வில்லை உடைய மன்மதன் கண்டு கலகம் விளைவிக்கும் கண்ணோவென்று எண்ணித் தன் மலர் அம்புகள் ஐந்தினையும் அவளின் முன்வைத்து வணங்குவான்.

இதுவும் இடைச் செருகலே.

0 Comments: