Monday, December 31, 2007

109.குரங்குநின்று கூத்தாடிய கோலத்தை

விவேக சிந்தாமணி
*********************
109.குரங்குநின்று கூத்தாடிய கோலத்தைக்கண்டே
அரங்குமுன்னிநாய் பாடிக்கொண்டா டியதுபோலும்

கரங்கணீட்டியே பேசிய கசடரைக்கண்டு

சிரங்களாட்டியே மெச்சிடுமறிவிலார் செய்கை.


பெருமையாகக் கைகளை நீட்டி தம்மைப் புகழ்ந்துபேசும் கீழ்மக்களைக் கண்டு தத்தம் தலைகளை ஆட்டி அவர்களைப் புகழும் அறிவில்லா மூடர்களின் செயல் எவ்வாறுள்ளதாம்?

முச்சந்தியிலே வேடிக்கை காட்டும் குரங்காட்டியின் கைக்குரங்கு ஆடுவதைக் கண்ட நாய், அவ்விடத்திலேயே குரங்கின் ஆட்டத்திற்குத் தக்கபடி குரங்கைப் புகழ்ந்து பாடுவதை ஒப்பாகும்.

0 Comments: