விவேக சிந்தாமணி
*********************
96.தன்மானங் குலமானந் தன்னைவந்தடைந்த
............வுயிர் தங்கண் மானம்
என்மான மாகிலென்ன வெல்லவரும்
............சரியெனவே யெண்ணும் போந்து
நன்மானம் வைத்தெந்த நாளுமவர்
............தங்களுக்கு நன்மை செய்வோர்
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற
...........வள்ளலென வழுத்த லாமே.
(இவ்வாறுமுளது)
தன்மானங் குலமானந் தனை வேண்டி வந்தடைந்தோர்
............தங்கண் மானம்
என்மான மிவைசமமா மென்றெண்ணிப் பிறரிடத்து
...........மினிமை யான
நன்மானம் வைத்தெந்த நாளுமவர் தங்களுக்கு
...........நலஞ்செய்வோனை
மன்மானி யடைந்தோரைக் காக்கின்ற வள்ளலென
...........வழுத்த லாமே.
இருபாடலுக்கும் பொருள் வேறுபாடு ஒன்றுமில்லை.
பெருமை பொருந்தியதாய்க் கருதப்படும் தன்மானம், தன் குலப்பற்று ஆகிய இரண்டும் பெரிதென எண்ணித் தன்னை அண்டி வந்தடைந்தோரின் மான அபிமானங்களைத் தன்னுடையதாய்க் கருதி, எப்பொழுதும் நன்மை செய்யும் ஒருவனை மரியாதை உடையவர் என்றும், தன்னைச் சார்ந்தோரைக் காக்கும் வள்ளல் எனவும் கூறலாம்.
சுருங்கச் சொல்லின், தன்குலத்தின்மீது எவ்வளவு பற்று வைத்துள்ளானோ அவ்வளவு பற்றையும் தன்னை அண்டிவந்தோரிடமும் செலுத்துவோனை வள்ளலென இவ்வுலகம் அழைக்கும்.
Monday, December 31, 2007
96.தன்மானங் குலமானந் தன்னை
Posted by ஞானவெட்டியான் at 10:29 AM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment