Monday, December 31, 2007

93.பூதலத்தில் மானிடராய்ப்பிறப்ப

விவேக சிந்தாமணி
************************
93.பூதலத்தில் மானிடராய்ப்பிறப்ப தரிதெனப்
............புகல்வர் பிறந்தோர் தாமும்
ஆதிமறை நூலின்மறை யருள்கீர்த்தி

...........யாந்தலங்க ளன்பாய்ச் சென்று

நீதிவழு வாதவகை வழக்குரைத்து
..........நல்லோரை நேசங் கொண்டு
காதவழி பேரில்லார் கழுதையெனப்
..........பாரிலுள்ளோர் கருதுவாரே.

(இப்படியும் பாடல் உண்டு)

பூதலத்தின் மானிடரா யொருவர் பிறந்திடலரிது பொருந்தினாலும்
ஆதிமறை நூலின்முறை யறிந்துபுக ழார்தலங்க ளன்பாச் சென்று
நீதிவழு வாமல்வருஙம் வழக் குரைத்து நல்லோரை நேசங் கொண்டு
காதள வேனும்பேர் பரப்பரே லவர் பிறப்புக் கழுதையாமே.

உலகில் மானிடராய்ப் பிறத்தல் அரிதெனப் பிறந்தவர்கள் கூறுவர். அப்படியே பிறந்தாலும், முறைப்படி கற்கவேண்டிய சாற்றிறங்களையும் நூல்களையும் கற்று, அருள், புகழ் ஆகியன பெற்று, வழிபடவேண்டிய தலங்களுக்குச் சென்று வழிபட்டு, வழக்கில் நீதி வழுவாது தீர்ப்பு வழங்கி, நல்லோருடன் நட்புகொண்டு, ஒரு காத வழிதொலைவுக்காவது நல்லவர் எனு பெயர் பெற்றிறாதவர்களை கழுதைப் பிறப்பென்று மற்றவர்கள் கருதுவார்களே.

0 Comments: