Monday, December 31, 2007

92.கரியொரு திங்களாறு கானவன்

விவேக சிந்தாமணி
********************
92.கரியொரு திங்களாறு கானவன் மூன்றுநாளும்
இரிதலைப் புற்றில்நாக மின்றுணு மிரையீதென்று

விரிதலை வேடன்கையில் விற்குதை நரம்பைக்கவ்வி

நரியனார் பட்டபாடு நாளையே படுவர்தாமே.


கரி = யானை
கானவன் = வேடுவன்
இரிதலை = நசுங்கிக் கெட்ட தலையுடைய
விரிதலை = ஒழுங்கு படுத்தப்படாத தலை

வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவன், எதிரே நின்ற யானையைக் கொல்ல வசதியாக அருகே இருந்த பாம்புப் புற்றின் மீதேறி அம்பு எய்து யானையைக் கொன்றான். அது அது சமயம், அவன் எடையால் உடைந்த புற்றில் வசித்த நாகம் வெளியே வந்து வேடனைக் கொத்தியது. விடம் ஏறி வேடன் இறந்தான். வேடன், இறக்குமுன் தன் கத்தியால் பாம்பின் தலையைக் கொய்ய அதுவும் இறந்தது. அதைக் கண்ட நரி ஒன்று, இன்று பாம்பைத் தின்னலாம்; வேடனை மூன்று நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம். யானையை 6 மாதங்களுக்கு வைத்துக்கொள்ளலாம் எனக் கணக்கு போட்டுக் கொண்டு, வேடன் கையில் இருந்த வில்லில் பூட்டிய அம்பைக் கண்டது. அதையகற்ற, வில்லின் நாணைக் கடித்து இழுக்க, அம்பு விடுபட்டு நரியின்மீது பாய்ந்து நரியைக் கொன்றது.

ஆகவே, செல்வம் ஆகியவற்றை நாம் எண்ணும்படி அனுபவிக்க முடியாது. நாமொன்று நினைக்க அது ஒன்றாய் முடியும். அற்பர் வீணான ஆசைகொண்டு அப்பேராசையால் தானும் அழிந்துபடுவராம்.

0 Comments: