Monday, December 31, 2007

91.நிலைத்தலை நீரில்மூழ்கி நின்ற

விவேக சிந்தாமணி
************************
91.நிலைத்தலை நீரில்மூழ்கி நின்றவ டன்னை நேரே
குலைத்தலை மஞ்ஞைகண்டு கூவெனக் காவில்ஏக

முலைத்தலை யதனைக்கண்டு மும்மதக் கரிவந்துற்ற

தலைத்தலைச் சிங்கமென்றக் களிறுகண் டேகிற்றம்மா.


நிலத்திலிருக்கும் குளத்தில் மூழ்கிக் குளிக்கும் மங்கையைக் கூட்டமாயிருந்த மயில்கள் பார்த்து அவளின் அழகு கண்டு பயந்து "கூ"வென அலறி பக்கத்தில் இருந்த சோலையில் மறைந்தன. அவளின் மார்பகங்களைக் கண்ட மதம் பொழியும் யானைகளின் கூட்டம் தம் இனமென ஓடிவந்துபார்க்கும்போது அவளிடைகண்டு சிங்கமென நினைந்து ஓடிச் சென்றன.
(இப்பாடல் விவேகம் கூறாமையால் இடைச் செருகலென்பர்.)








0 Comments: