Monday, December 31, 2007

90.மருவு சந்தணக் குழம்புநன் மண

விவேக சிந்தாமணி
********************
90.மருவு சந்தணக் குழம்புநன் மணமலர் மகிழ்வணிந் தாலும்
சருவ வையமாமனமுள மாதர்பார் சார்வது மாகாதே

பருவ தங்கள் போற் பற்பல நவமணிப் பைம்பொனை யீந்தாலும்

கெருவ மிஞ்சிய மானிட ருறவெணிக் கிட்டலு மாகாதே.


மருவு = பொருந்திய

சந்தணப் பூச்சையும் நறுமணம் பொருந்திய மலர்களையும் பார்ப்பவருக்கு மகிழ்ச்சி அதிகரிக்குமாறு அணிந்து அலங்கரித்துக் கொண்டாலும், எச் சமயம் நமக்குக் கேடு விளையுமோ எனப் பிறரைச் சந்தேகப்படத்தக்க கணிகையர் பக்கம் ஒருவர் நெருங்குவது கூடாது. அதுபோல், மலைபோல நவமணிகளையும் பசும் பொன்னையும் கொடுத்தாலும், தன்முனைப்பு அதிகமுள்ள மனிதனின் நேயத்தை விரும்பி அவர் அருகே நெருங்குதலும் பெருந்தீங்கையே விளைவிக்கும்.

0 Comments: