Monday, December 31, 2007

89.தண்டுலாவிய தாமரைப்பொய்கை

விவேக சிந்தாமணி
********************

89.தண்டுலாவிய தாமரைப்பொய்கையில்
மொண்டுநீரை முகத்தருகேந்தினாள்

கெண்டைகெண்டை எனக்கரையேறினாள்

கெண்டைகாண்கிலள் நின்றுதயங்கினாள்.


மங்கையின் கண்ணை வருணித்தல்
****************************************
இப்பாடல் விவேக சிந்தாமணியில் ஏன் உள்ளது? எனும் வினா என்னுள்ளே இருப்பினும், தொடர்பு விட்டுப்போகாவண்ணம் தருகிறோம்.

கொடிகள் படர்ந்துள்ள தாமரைத் தடாகத்தில் உள்ள நீரைக் கையில் எடுத்து முகர்ந்து பார்க்கும்பொழுது, அதில் தெரிந்த தன் முகத்தைக் கண்டாள். அதில் உள்ள கண்களைப் பார்த்து, "கெண்டை! கெண்டை!!" எனக் கூவிக்கொண்டு கரை ஏறினாள். கரை ஏறியபின் பார்க்கும்பொழுது கெண்டையை எங்குமே காண இயலவில்லை.

பிகு: இப்பாடல் இடைச் செருகலாகவும் இருக்கலாம்.

0 Comments: