Monday, December 31, 2007

88.கற்பூரப் பாத்திகட்டிக் கத்தூரி

விவேக சிந்தாமணி
*********************
88.கற்பூரப் பாத்திகட்டிக் கத்தூரி
............யெருப்போட்டுக் கமழ்நீர்பாய்ச்சிப்

பொற்பூர வுள்ளியினை விதைத்தாலு
...........மதன்குணத்தைப் பொருந்தக்காட்டும்

சொற்பேதை யர்க்கறிவிங் கினிதாக
..........வருமெனவே சொல்லினாலும்

நற்போதம் வாராதாங் கவர்குணமே
.........மேலாக நடக்குந்தானே.


பச்சைக் கற்பூரத்தால் பாத்தி கட்டி அதில் மணம் கமழும் கத்தூரியை எருவாக்கி இட்டபின்னர் அதில் வெள்ளைப் பூண்டை விதைத்து, நறுமணம் கமழும் பன்னீரைப் பாய்ச்சி அதை வளர்த்தாலும், அது வளர்ந்த பின்னர், தன்னுடைய (உள்ளி)மணத்தையே வீசும். அதுபோல், இவ்வுலகில், பழிச் சொற்களை ஏற்றுக்கொள்ளத் தயங்காத முழு மூடருக்கு என்னதான் இனிமையாக நற்புத்தி புகட்டினாலும் நல்ல அறிவு வரவேவராது. அவர்தம் இயற்கையான தீய குணங்களே மேலோங்கி நிற்கும்.

0 Comments: