Monday, December 31, 2007

85.சேய்கொண்டா ரும்கமலச் செம்மலுடனே

விவேக சிந்தாமணி
*********************
85.சேய்கொண்டா ரும்கமலச் செம்மலுடனே யரவப்
பாய்கொண்டா ரும்பணியும் பட்டீ சுரத்தானே

நோய்கொண்டா லும்கொளலாம் நூறுவய தாமளவும்

பேய்கொண்டா லும்கொளலாம் பெண்கொள்ள லாகாதே.


சேய்=சிவந்த
பணியும் = தொழில்புரியும்

பட்டீசுவரத்தில் எழுந்தருளியிருந்து, சிவந்த இதழுடைய தாமரை மலரில் வீற்றுள்ள பெருமனுடனும்(பிரமனும்), ஆதிசேடன் எனும் பாம்பின் மீது பள்ளிகொண்ட எம்பெருமாளாம் திருமாலுடனும் சேர்ந்து மூன்று தொழில்களையும் நடத்தும் அப்பனே!

ஒருவன் நூறு வயதளவு வரை வாழ்ந்து, நோயென்னும் பிணிகொண்டு வாழ்ந்தாலும் வாழலாம். அதுவன்றி, பேயை ஒன்றைத் தமது உடைமையாக்கி, அத்துடன் வாழ்ந்தாலும் வாழலாம்.

ஆனால், மனதளவால் மாறுபட்ட ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்து அவளுடன் வாழ்வது மிகக் கொடிதாகையால், அத்தகைய பெண்ணைக் கொள்ளலாகாது.

2 Comments:

Anonymous said...

ஹூம்,அந்த காலத்திலும் அப்படித்தான் இருந்திருக்கு போல.

Anonymous said...

அன்பு குமார்,
ஆமாம்.
நன்றி.