Monday, December 31, 2007

84.கோளரி யடர்ந்தகாட்டிற் குறங்கில்

விவேக சிந்தாமணி
*********************
84.கோளரி யடர்ந்தகாட்டிற் குறங்கில்வைத் தமுதமூட்டித்
தோளினிற் றூக்கிவைத்துச் சுமந்து பேறாவளர்த்த

ஆளனைக் கிணற்றிற்றள்ளி யழகிலா முடவர்சேர்ந்தாள்

காளநேர்க் கண்ணினாரைக் கனவிலும் நம்பொணாதே.


நற்குணம் இல்லாத மங்கை, முன்னொரு காலத்தில் தளர்ந்திருந்தபோது, தன்னை மடியில்(துடையில்) வைத்து உணவைத் தன் கையால் பாசத்தோடு ஊட்டி, அன்புமிகுதியால் தன்னைத்தன் தோளின்மீது தூக்கி வைத்துச் சுமந்து காப்பாற்றி வளர்த்த கணவனை, கொலை செய்வதைத் தன் தொழிலாய் உடைய சிங்கங்கள் நிறைந்து வாழும் காட்டில், நன்றி மறந்து கிணற்றிலே தள்ளிக் கொலை செய்துவிட்டு, காலில்லாத ஆசைக்குரியவனுடன் சேர்ந்து மகிழ்ந்தாள். ஆகையால், இத்தகைய கொடிய நஞ்சைப்போன்ற கண்களுடைய வஞ்சக மங்கைகளைக் கனவில்கூட நம்பக்கூடாது.

0 Comments: