Monday, December 31, 2007

83.உண்ணல்பூச்சூடனெஞ் சுவத்த

விவேக சிந்தாமணி
*********************
83.உண்ணல்பூச்சூடனெஞ் சுவத்தலொப்பனை
பண்ணலெல்லாமவர் பார்க்கவேயன்றோ?

யண்ணல்தன்பிரிவினை யறிந்துந்தோழிநீ

மண்ணவந்தனையிது மடமையாகுமால்.


என்னுயிர்த் தோழியே! உலகில் கற்பிற் சிறந்த பெண்கள் இனிமையுடைய உணவுப் பண்டங்களை உண்ணுதலும், வாசனை மிகுந்த மலர்களை அணிந்து கூந்தல் முடித்தலும், மனமகிழ்ச்சி, முகமலர்ச்சியோடு இருத்தலும் மற்றும் அழகிய ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொள்ளுதலும், தன் மனதுக்கு இசைந்த கணவன் கண்டு மகிழவே. அப்படி இருக்க, பெருமையிற் சிறந்த என் கணவன் தற்போது என்னைவிட்டு அகன்றிருப்பது தெரிந்தும், என்னை அலங்காரம் செய்ய வந்திருப்பது உன் அறியாமையால் அல்லவா?

0 Comments: