Monday, December 31, 2007

82.கன்மனப் பார்ப்பார் தங்களை

விவேக சிந்தாமணி
********************
82.கன்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக்
............காகத்தை யென்செயப் படைத்தாய்?
துன்மதி வணிகர் தங்களைப் படைத்துச்
...........சோரரை யென்செயப் படைத்தாய்?
வன்மன வடுகர் தங்களைப் படைத்து
..........வானர மென்செயப் படைத்தாய்?
நன்மனைதோறும் பெண்களைப் படைத்து
.........னமனையு மென்செயப் படைத்தனையே?

வேதியரில் கல்போன்ற மனதையுடையவரையும், காகத்தையும், வணிகருள் பிறரை ஏமாற்றுபவரையும், கெட்ட மனத்தை உடையவரையும், திருடரையும், வலிய நெஞ்சத்தை உடைய வடுகரையும், குரங்கையும், நல்ல இல்லம்தோரும் பெண்களைப் படைத்து, அத்துடன் உயிரை வாங்கும் நமனையும் ஏன் படைத்தாய், நான்முகனே?

இப்படியல்லாது, பின்வருமாரும் பொருள் கொள்வாருண்டு:

வேதியரில் கல்போன்ற மனதையுடையவரைப் படைத்தாய்; பின் காகத்தை ஏன் படைத்தாய்?
வணிகருள் பிறரை ஏமாற்றும் வணிகரைப் படைத்துப் பின் திருடரை ஏன் படைத்தாய்?
கெட்ட மனத்தை உடையவரையும், வலிய நெஞ்சத்தை உடைய வடுகரையும் படைத்துப் பின், குரங்கையும் ஏன் படைத்தாய்?
நல்ல இல்லம்தோரும் பெண்களைப் படைத்துப் பின் உயிரை வாங்கும் நமனையும் ஏன் படைத்தாய், நான்முகனே?

0 Comments: