Monday, December 31, 2007

81.உணங்கி யொருகால் முடமாகி

விவேக சிந்தாமணி
**********************
81.உணங்கி யொருகால் முடமாகியொருகண் ணின்றிச் செவியிழந்து
வணங்கு நெடுவா லறுப்புண்டு மன்னு முதுகில் வயிறொட்டி

அணங்கு நலிய மூப்பெய்தி யகல்வா யோடு கழுத்தேந்திச்

சுணங்கன் முடுவல் பின்சென்றா லியாரைக் காமன் றுயர்செய்யான்?


காமத்தால் உடல் மெலிந்து, ஒருகால் நொண்டியாகி, ஒரு கண்ணில்லாது, அறுபட்டதால் செவிகள் இல்லாது, வளைந்த நீண்ட வால் அறுக்கப்பட்டு முதுகுடன் வயிறு ஒட்டிய, மூப்பு அடைந்து அழகு குன்றிய, அகன்ற வயுடன் கூடிய கழுத்தை உடைய ஒரு ஆண் நாயும்கூட ஒரு பெண் நாயின் பின் அலையும். அப்படிக் காம வேதனையினால் அலையுமேயானால், மன்மதன் இவ்வுலகில் யாரைத்தான் துன்புறுத்த மாட்டான்? உலகில் மன்மதன் எத்தகையவர் மனத்தையும் கலங்க வைத்துத் துயரூட்டுவான்.

0 Comments: