Monday, December 31, 2007

78.தாய்பகை பிறர்நட்பாகில் தந்தைகடன்

விவேக சிந்தாமணி
********************
78.தாய்பகை பிறர்நட்பாகில் தந்தைகடன் காரனாகில்
மாய்பகை மனைவியாரும் மாவழ குற்றபோது

பேய்பகை பிள்ளைதானும் பெருமைநூல்கல்லா விட்டால்

சேய்பகை யொருவர்க்காகு மென்றனர் தெளிந்தநூலோர்.


தாய்க்கு தன்மீது அன்பில்லையெனில் தனக்குத் தாயும் பகையாவாள். கடனை வாங்கிவிட்டுத் தன்னை அக்கடனைக் கட்டச் சொன்னால் கடன் வாங்கிய தகப்பனும் பகையாம். மிகுந்த அழகுள்ள மனைவியும் நல்லறிவை இழந்திருக்கப் பேய் ஆவாள்; அப்பொழுது அவளும் பகையே. ஞானமுண்டாக்கும் அறிவுடைய நூல்களைக் கற்காத மகனும் பகையாவான். இது நூல்களை நுணுகி ஆராய்ந்தது தெளிந்து உணர்ந்தோரின் கருத்தாம்.

0 Comments: