Monday, December 31, 2007

79.நிலைதளர்ந்திட்டபோது நீணிலத்து

விவேக சிந்தாமணி
*********************
79.நிலைதளர்ந்திட்டபோது நீணிலத்துறவுமில்லை
சலமிருந்தகன்றபோது தாமரைக்கருக்கன் கூற்றம்

பலவனமெரியும்போது பற்றுதீக் குறவாங்காற்று

மெலிவது விளக்கேயாகில் மீண்டுமக் காற்றேகூற்றாம்.


நீர் நிறைந்திருந்தபோது குளத்தின்மேலுள்ள தாமரை சூரிய ஒளியால் செழித்து வளர்ந்திருக்கும். ஆனால் நீர் வற்றிய உடனே, அந்தச் சூரிய ஒளியே(வெப்பம்) தாமரைக்கு எமனாகிவிடும். வெப்பம் தாங்காது தாமரை அழிந்துபடும். மழை முதலிய நல்ல பயன்களை கொடுக்கக்கூடிய காடு தீப்பற்றி எரியுங் காலத்தில், பற்றி எரியும் தீக்குக் காற்று துணைநின்று எரிவதை அதிகப்படுத்தும்; அப்பெரு நெருப்பானது மெலிவடைந்து சிறிய விளக்கின் தீச்சுடராகிவிட்டால், அந்த காற்றே அதை அணைக்கும் எதிரியாகிவிடும். இவைகளைப்போல், இப்பரந்த உலகில், மக்களின் உயர்ந்தநிலை கெட்டுத் தாழ்ந்த நிலை அடையும்பொழுது யாரெல்லாம் உதவிபெற்று, உயர்ந்து துணை நின்றார்களோ அவர்களெல்லாம் பகையாகி ஒதுங்கி விடுவர்.

0 Comments: