Monday, December 31, 2007

75.நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த

விவேக சிந்தாமணி
*********************
75.நிட்டையிலே யிருந்துமனத் துறவடைந்த
.................பெரியோர்க ணிமலன்றாளைக்
கிட்டையிலே தொடுத்து முத்தி பெருமளவும்
.................பெரியசுகங் கிடைக்குங்காம
வெட்டையிலே மதிமயங்குஞ் சிறுவருக்கு
................மணம்பேசி விரும்பித்தாலிக்
கட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே
...............கிடத்துமட்டுங் கவலைதானே.

மனதை ஒருநிலைப்படுத்தும் யோகத்திலே அசைவற்று நின்று, பற்று நீக்கி மனதால் துறவு நிலை அடைந்த பெரியோர்கள் மலமற்ற இறையின் திருவடிகளை முதன்முதலில் தவத்திலே சேரும்பொழுது மகிழ்ச்சி தொடங்கி இறுதியில் எல்லாவற்றையுங் கடந்து வீடுபேறு அடையும் வரையிலும் பேரின்பத்தில் மூழ்கித் திளைத்து இருப்பர். காமப்பேயால் சித்தங்கலங்கித் தடுமாறும் சிறியோருக்கு, தாய்தந்தையர் திருமணம்பேசி முடிவெடுத்து, மணப்பெண்ணுக்குத் தாலி அணிவித்தது முதல் துன்பம் தொடங்கிப் பின்னர் அவன் இறந்து இடுகாட்டில் சடலம் எரிக்கும் வரையில் அத்துன்பம் தொடரும்.

0 Comments: