Monday, December 31, 2007

73.மண்டலத்தோர்கள் செய்த பாவ

விவேகா சிந்தாமணி
**********************
73.மண்டலத்தோர்கள் செய்த பாவமன் னவரைச்சேருந்
திண்டிரன் மன்னர்செய்த தீங்குமந் திரியைச்சேரும்

தொண்டர்கள் செய்ததோடந் தொடர்ந்துதங் குருவைச்சேரும்

கண்டன மொழியாள்செய்த கன்மமுங் கணவர்க்காமே.


நாட்டில் உள்ளவர்கள் செய்த தீவினைகள், அவர்களை ஆளும் மன்னனைச் சாரும் - மக்களைச் சரியாக வழி நடத்தாததால். வலிமையும் வெற்றியும் உடைய மன்னன் செய்த தீவினைகள், நல்வினை தீவினைகளை ஆய்ந்து அரசனை நல்வழி நடத்தாததால் மந்திரியைச் சாரும். அதுபோலவே, சீடர்கள் செய்த பாவம் குருவைச் சேரும். கணவன் தன் மனைவியைச் சரியான பாதையில் வழி நடத்தாததால், கற்கண்டு போல மொழியுடைய மனைவி செய்த தீவினை கணவனுக்காம்.

0 Comments: