Monday, December 31, 2007

45.சொல்லுவார் வார்த்தைகேட்டு

விவேக சிந்தாமணி
**********************

45.சொல்லுவார் வார்த்தைகேட்டுத் தோழமை யிகழ்வோர் புல்லர்
நல்லவர் விசாரியாமற் செய்வரோ நரிசொல்கேட்டு
வல்லியம்பசுவுங்கூடி மாண்டதோர் கதையைப்போல
புல்லியரொருவராலே போகுமே யாவுநாசம்.

அற்பர்கள் பிறர் சொல்கேட்டு நட்பை இகழ்வார்கள்.
அப்படிச் செய்தால், நரிசொல் கேட்டுப் புலியும் பசுவும்கூடி இறந்துபோன பஞ்ச தந்திரக் கதையைப் போல அறிவில்லாதவர்களால் எல்லாம் நாசமாகும்.
மேலானவர்கள் தீர விசாரிக்காமல் ஒன்றையும் செய்யமாட்டார்கள்.

0 Comments: