Monday, December 31, 2007

46.கதலிவீரர் களத்திடை வையினும்

விவேக சிந்தாமணி
**********************

46.கதலிவீரர் களத்திடை வையினும்
குதலைவாயிற் குழவிகள் வையினும்
மதனலீலையின் மங்கையர் வையினும்
இதமுறச்செவிக் கின்பம் விளையுமே.

விருதுகளைப்பெற்ற சுத்த வீரர் போர்க்களத்தில் திட்டினாலும், மழலைபேசும் குழந்தைகள் திட்டினாலும், கலவியின்போது மணாட்டி திட்டினும், இனிமையுறச் செவிக்கின்பமே விளையும்.

0 Comments: