Monday, December 31, 2007

43.பெருத்திடு செல்வமாம் பிணி

விவேக சிந்தாமணி
**********************

43.பெருத்திடு செல்வமாம் பிணிவந் துற்றிடில்
உருத்தெரி யாமலே யொளி மழுங்கிடும்
மருத்துள தோவெனில் வாகடத்திலை
தரித்திர மென்னுமோர் மருந்திற் றீருமே.


ஒருவனுக்குப் பெருத்த செல்வம் சேர்ந்து அதனால் செருக்கேற்படின் உருவம் தெரியாமல் கண்ணொளி மங்கிவிடும். செருக்கெனும் நோய்க்கு மருந்துள்ளதா என்று ஆராய்ந்தால், வைத்திய சாற்றிறத்தில் இல்லை. தரித்திரம் எனும் மருந்தினால் மட்டுமே தீரும்.

0 Comments: