Monday, December 31, 2007

42.பருப்ப தங்கள்போ னிறைந்திடு

விவேக சிந்தாமணி
**********************

42.பருப்ப தங்கள்போ னிறைந்திடு நவமணிப்
.....................பலன்களைக் கொடுத்தாலும்
விருப்ப நீங்கிய கணவரைத் தழுவுதல்
....................வீணதாம் விரையார்ந்த
குருக்கொள் சந்தனக் குழம்பினை யன்பொடு
....................குளிர்தர வணிந்தாலும்
செருக்கு மிஞ்சியவற்பர்தம் தோழமை
....................செப்பவு மாகாதே.

மலைகளைப்போல் குவியல் குவியலாக நவரத்தினங்களைக் கொடுத்தாலும் விருப்பமில்லக் கணவணைத்தழுவுதல் வீணே. மிகுந்த செருக்குடைய அற்பர்கள் நறுமணமுடைய சந்தணக் குழம்பினை ஆசையோடு உடல் குளிரப் பூசினாலும் அவருடைய நட்பு சொல்லவும் தகாது.

0 Comments: