மாலியத்தார் அனைவரும் அறிய வேண்டிய
3 மெய்ப்பொருட்கள்.
**************************************************
1.தத்துவம்.
2.ஹிதம்
3.புருஷார்த்தம்.
1.தத்துவம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
(அ)சித்து - அறிவுடையன - சேதனம்
(ஆ)அசித்து - அறிவற்றன - அசேதனம்
(இ)ஈசுவரன்.
பரம்பொருளாம் ஈசுவரன், சித்து, அசித்து ஆகியனவற்றைத் தம் அங்கங்களாய்க் கொண்டு, முத்தொழில்களாம் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்து பிரபஞ்சத்தை இயக்குகிறான்.
2.ஹிதம் - சீவான்மா தன் மாயாபந்தங்களை அகற்றிப் பரமாத்மாவை அடையும் நெறி. அதுவே "சரணாகதி" நெறி. இதைப் பிரபத்தி என்பர். கீதா உபதேசமும் இதே.
3.புருஷார்த்தம் - சீவான்மா, ஸ்ரீவைகுண்டத்தில் வதியும் பரமனை எப்படி நெருங்கி இறையனுபவம் பெறுகிறது என்பதைக் காட்டுவது.
Thursday, October 19, 2006
மாலியம்-மெய்ப்பொருட்கள் 3
Posted by ஞானவெட்டியான் at 7:56 PM
Labels: ஞானவெட்டியான், மாலியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment