Wednesday, February 18, 2009

பழமொழி நானூறு - 9

பழமொழி நானூறு - 9
**********************

9. நல்லார் நலத்தை உணரின் அவரினும்
நல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல
மயிலாடு மாமலை வெற்பமற்(று) என்றும்
அயிலாலே போழ்ப அயில்.

அயில் - இரும்பு


கண்களுக்கினிய (உவகையோடு தோகை விரித்து ஆடும்) மயில்கள் நடமாடும் சிறந்த மலைநாட்டை உடையவனே! எக்காலத்தேயும் இரும்பைக் கூரிய இரும்பினாலேயே பிளப்பார்கள். அதுபோல, கற்று அறிந்த நற்குணமுடையோரின் அறிவின் நன்மையை அறிவதாக இருந்தால், அவர்களை விடக் கல்வி ஒழுக்கங்களில் மிக்க அறிஞர்களே அதனை அறிவார்கள். கல்வி ஒன்றே உடைய ஒத்தாரும் அவையின்றி இழிந்தாரும் அறியமாட்டார்கள்.

பழமொழி
*********
"நல்லார் அறிவினை அவரினும் நல்லாரே அறிவர்."

"இரும்பை இரும்புகொண்டு துணித்தல் வேண்டும்."

0 Comments: