99. தடாரி தண்ணுமை திண்டிமஞ் சல்லரி இடக்கை
படாது கூடியே யொலித்திடல்போல இப்பாரில்
விடாத நாணகன்று அன்னிய புருடனை விழைந்தே
அடாதுசெய்த மங்கையர்வசை யொலித்திடு மன்றே.
இவ்வுலகில் நாணமின்றித் தன் கணவனை விட்டு வேறொருவனை விரும்பிக் கூடும் மங்கையரைப் பற்றிய பழிச் சொற்கள்(அவதூறு) அவர்கள் எவ்வளவு இரகசியமாக வைத்து இருப்பினும் பேரிகை, திரிகை ஆகிய பேரிரைச்சல் தரும் இசைக்கருவிகள் முழங்கினால்போல் எங்கும் பரவி ஒலித்திடும்.
Sunday, February 15, 2009
விவேக சிந்தாமணி - 99
Posted by ஞானவெட்டியான் at 4:30 PM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment