வசிட்டர் முதலிய முனிவர்கள் வருதல்
2.38 அழிவும் ஆக்கமும் உரையினாற் செயும்வலி அடைந்தார்
மொழியும் யாக்கையு மனமுநல் அறங்களின் முயன்று
கழியு மாறுமுக் காலமு முளர்தளை கழன்றார்
பழியி லாவதிட் டாதிமா முனிவரர் பரந்தார்.
ஆக்கம் - பெருக்கம்.
உரை - வாய்மொழி.
தளை கழன்றார் - உலகப் பற்றுக்களினின்றும் விடுபட்டவர்.
பரந்தார் - பரவினார்கள்.
முக்காலமும் உளர் - மூன்று காலத்திலும் இருப்பவர்கள்.
பழி இல்லாத வசிட்டர் முதலிய இருடி(ரிஷி)கள் வந்து பரவினார்கள். அந்த முனிவர்களது பெருமையை மேல் மூன்று அடிகளில் கூறுகிறார் ஆசிரியர். ஆக்கவும் அழிக்கவும் முடியும் அவர்களால்; அவ்வலிமையை வாய்மொழியால் மந்திர செபஞ்செய்து பெருக்கிக் கொண்டவர்கள். உடலாலும் மனதாலும் சொல்லாலும் செயலாலும் செம்மையாய் வாழ்நாளைக் கழித்தவர்கள். முக்காலமும் உணர்ந்தவர்கள்; வாழ்பவர்கள். உலகப் பற்றுக்களினின்றும் விடுபட்டவர்கள்.
Saturday, February 14, 2009
பிரபுலிங்க லீலை - 2.38
Posted by ஞானவெட்டியான் at 12:07 PM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment