பழமொழி நானூறு - 14
********************************
14.கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்
நல்லேம்யாம் என்றொருவன் நன்கு மதித்தலென்
சொல்லால் வணக்கி வெகுண்(டு) அடுகிற்பார்க்கும்
சொல்லாக்கால் சொல்லுவது இல்.
நூல்களைக் கல்லாதவன் தான் நுண்மையாக அறிந்ததாக் நினைக்கும் மிக்க நுண்பொருளைப் பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. (ஆனபின்) கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன் நல்ல பொருள் விளக்கம் எனக்குத் தெரியும் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எந்தக் காரணத்தினால்? தமது சொற்களால் செய்யும் தவத்திற்குப் பகையாய் உள்ளவரைப் பணியச் செய்து, அப்படிப் பணியாதவர்களைச் சினந்து சாபம் இட்டுக் கொல்லுகின்ற முனிவர்களுக்கும், தாம் கருதியதை(எண்ணியதை) எடுத்துச் சொல்ல முடியாத இடத்தில் தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இல்லையாம்.
சொற்றிறம் இல்லையெனில் சாபம் எவ்வாறு பலிக்கும்?
கற்றோருக்குச் சொல்வன்மை இன்றியமையாதது.
பழமொழி
**********
"முற்றத்துறந்த முனிவர்கட்கும் சொற்றிறம் வேண்டும்."
Friday, February 27, 2009
பழமொழி நானூறு - 14
Posted by ஞானவெட்டியான் at 9:30 AM
Labels: பழமொழி நானூறு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment