பழமொழி நானூறு - 13
********************************
13.கல்லாதான் கண்ட கழிநுட்பம் கற்றார்முன்
சொல்லுங்கால் சோர்வு படுதலால் - நல்லாய்
வினாமுந் துறாத உரையில்லை இல்லை
கனாமுந் துறாத வினை.
நற்குணம் உடைய பெண்ணே! நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள், நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது வலிவு இழத்தலால் வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை.(கல்வி இன்றி விளங்கும் நுண்பொருளும் இல்லை)
பழமொழிகள்
************
1.வினா முந்துறாத விடையில்லை
2.கனா முந்துறாத வினையில்லை
Monday, February 23, 2009
பழமொழி நானூறு - 13
Posted by ஞானவெட்டியான் at 9:44 AM
Labels: பழமொழி நானூறு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment