பழமொழி நானூறு - 12
******************************
12.கற்றானும் கற்றார்வாய்க் கேட்டானும் இல்லாதார்
தெற்ற உணரார் பொருள்களை - எற்றேல்
அறிவில்லான் மெய்தலைப் பாடு பிறிதில்லை
நாவல்கீழ்ப் பெற்ற கனி.
நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும் கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள். கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல் எத்தன்மை உடையதெனில், நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல் ஆவதன்றி, கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.
"கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களை அறியமாட்டார்கள்.'
பழமொழி
**********
"நாவல்கீழ்ப் பெற்ற கனி"
Saturday, February 21, 2009
பழமொழி நானூறு - 12
Posted by ஞானவெட்டியான் at 10:20 AM
Labels: பழமொழி நானூறு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment