பழமொழி நானூறு - 11
**********************
11.விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்
கதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்
பதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்
மதிப்புறத்துப் பட்ட மறு.
மதிப்புறம் - சந்திரனின் ஓரம்
நல்ல நெறிகள் அமைந்த நூல்களை அறிந்து, நூல்களின் விதிகளுக்கும் தமது வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாது வாழ்பவர், மாறுபட்டு எழுந்தோர்களது நூலின் கொள்கைகளைத் தம் அறிவின் வன்மையால் வென்று தலைமைப் பேறு பெற்று வாழும் அறிஞர்கள், இகழ்ச்சிக்குறிய செயல்களைச் செய்தல் சந்திரனின் மேல் விளங்கும் களங்கம் போல் விளங்கித் தோன்றும்.
பழமொழி
*********
"மதிப்புறத்துப் பட்ட மறு"
Friday, February 20, 2009
பழமொழி நானூறு - 11
Posted by ஞானவெட்டியான் at 4:19 PM
Labels: பழமொழி நானூறு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment