Thursday, February 19, 2009

பழமொழி நானூறு - 10

பழமொழி நானூறு - 10
***********************

10. கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார் - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.



பாறைக் கற்களிருந்து இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலை நாட்டை உடையவனே! நீர் நிறைந்த குடம் ஆரவாரம் செய்யாது. அதுபோல, நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அடக்கத்துடன் செயலாற்றுவார்கள். நூல் உண்மைகளின் அறிவும், அனுபவ அறிவும் அற்று கல்வி மட்டும் கற்றவர்கள், தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

அதாவது, கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசமாட்டார்கள்.

பழமொழி
**********

"நிறை குடம் நீர்தளும்பாது."

0 Comments: