Saturday, June 07, 2008

பிரபுலிங்க லீலை - 2.13

கையின் கண்ணுள்ள மான் திரும்பியதற்குக் காரணம்

2.13 நகந்த ருங்கொடி கண்களை நாணியே
முகந்தி ரும்பு முறையில் திரும்புமான்
மகிழ்ந்தி டங்கதிர் வீர மழுவலந்
தகுத்த குந்தகு மென்று தயங்குற.

நகம் தரும்கொடி - மலைபெற்ற பூங்கொடிபோல்பவளாகிய இறைவி,
முகம் திரும்பும் - முகத்தைத் திரும்பிக் கொள்ளும்,
முறையில் - தன்மையில்,
கதிர் - ஒளி,
வீரமழு - வீரத்தன்மை பொருந்திய மழு,
தயங்குற - விளங்க.

இறைவனுடைய இடதுகையிலுள்ள மான் இறைவியின் கண்களுக்கு நாணமடைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டது. வலது கையிலுள்ள மழு தகும் தகும் என்னும் ஒலியுண்டாகும்படி எரிதல், மான் திரும்பிக்கொண்டது தகும் தகும் என்று கூறுவது போல் இருக்கிறதென்று காரணங் கற்பித்தார் ஆசிரியர். இது தற்குறிப்பு.
மான் இடக்கையினும் மழு வலக்கையினும் விளங்கின.

0 Comments: