காதில் தோடுகளும் கண்டக் கருமையும்
2.12 எண்ணு மன்பர் இதயமென் புட்படு
கண்ணி போன்றுவார் காதிடைத் தோடுற
நண்ணு மாதுமை நன்னுதற் பொட்டென
வண்ண நீல மணிமிடற் றொன்றுற.
இதயம் என்புள் - உள்ளமாகிய பறவைகள்,
படும் - அகப்படும்,
கண்ணி - வலை,
வார் - நீண்ட,
வண்ணநீலம் - அழகிய கருமை,
மணிமிடறு - அழகிய கண்டம்.
ஒன்றுற - அமைய.
காதுத்தோடுகள் அன்பர்களது உள்ளப் பறவைகளைப் பிடிக்கிற வலைகளைப் போலவும், கண்டக்கருமை உமையம்மை நெற்றிப் பொட்டைப் போன்றும், அமைந்துள்ளன.
தோட்டைக் கண்ணியாகக் குறித்தலால் தற்குறிப் பேற்றவணி.
நெற்றித் திலகத்தைக் கண்டக் கருமைக்கு உவமை கூறப்பட்டது.
Friday, June 06, 2008
பிரபுலிங்க லீலை - 2.12
Posted by ஞானவெட்டியான் at 8:59 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment