காப்பு
-------
1.உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்
பன்னிப் பறவையாய்ப் பாவித்து - வன்னி
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்
கதைகா வியப்பொருளே காப்பு.
உன்னி = தியானித்து, கவனத்துடன்
பன்னி = பண்ணி = அமைத்து
வன்னி = வன்னி மரம், நெருப்பு = குண்டலிப் பாதையாம் நெருப்பாறு
நற்சேத்திரத்தை வைத்துத்தான் (புள்,பறவை) பட்சி நிணயித்தல் வேண்டும். அது தெரியாதபோது: வந்தவன் உரைக்கும் முதல் எழுத்தைக்கொண்டு, அதை அமைத்துப் பறவையாய் உருவகப்படுத்தி அக்கினி திசையாம்
தென்கிழக்கில் உதிக்கும் பட்சிகளின் உண்மையை உரைக்க இக்கலை கதையெனினும் காவியமெனினும் அதனுள்ளிருக்கும் மெய்ப்பொருளே காப்பு.
(யோக விளக்கம்):
ஒருவனாகிய ஆடவல்லான் உரைத்த முதலெழுத்தாம் குத்தெழுத்தைக் கவனமுடன் தியானித்து (உன்னி), அதை ஆன்ம பட்சியாக அமைத்துக் (பன்னி) குண்டலியாம் அங்கியில் உதிக்கும் பட்சியை (சரத்தை) உள் மெய்யில்
(உண்மை) ஒலிக்க (உரைக்க) உதவும் கதைகாவியப் பொருளே காப்பாம்.
ஞானவெட்டியான்
http://siththan.com/
Wednesday, June 04, 2008
பஞ்சபட்சி சாற்றிறம் - 1
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment