Wednesday, December 26, 2007

நவராத்திரி - மூன்றாம் நாள்

நவராத்திரி - மூன்றாம் நாள்
************************************
மகிடனை அழித்த அம்மையை சூலமும் கையுமாக எருமைத் தலையின்மீது வீற்றிருக்கும் கோலத்தில் அலங்கரித்து வழிபடுபவர் சிலர். இத்துர்க்கையைக் கல்யாணி என்பர்.

இன்னும் சிலர் பராசக்தியை இந்திராணியாகக் கருதி வழிபடவேண்டும் என்பர். ஆயிரம் கண்ணுடைய இவள் இந்திரனின் முடி, சக்தி ஆகியவைகளைத் தரித்து கையில் வச்சிராயுதம் ஏந்தி இருப்பவள். வெள்ளை யானையாம் ஐராவதத்தின் மேலமர்ந்து விருத்திராசுரன் என்னும் அவுணனை(அரக்கன்) அழித்தவள். பதவி உயர்வுக்காக இவளை வேண்டுவோர் பலர்.

படையல்: வெண்பொங்கல்
துதிக்கவேண்டிய இராகம்: காம்போதி

0 Comments: