எண்ணும் எழுத்தும்
***********************
எண்ணென்பது - நாம் எண்ணும் எண்ணங்களும்,(ஆங்கிலத்தில் நம்பரும்)
எழுத்தெனப்படுவது -
"அகரமுதல் நகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே" - தொல்காப்பியம்.
பீஜங்களெனப்படும் மூலவெழுத்தென்பான் யோகி.
ஒன்று :
ஆண்டவன், அறிவு, முக்தி,
இரண்டு :
செல்வம் - கல்வி, பொருள்
அறம் - இல்லறம், துறவறம்
தோற்றம் - சரம், அசரம்
வினை - நல்வினை, தீவினை
பிறப்பு - இம்மை, மறுமை
மூன்று :
புரம் - பொன்மதில், வெள்ளி மதில், இருப்பு மதில்
பலை(காய்) - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
கடுகம்(மருந்து) - சுக்கு, மிளகு, திப்பிலி
தானம் -
உத்தம தானம் -
தரும வழியில் வந்த பொருளை மனமடங்கி,மகிழ்ந்து தாழ்ந்து கொடுத்தல்.
மத்திம தானம் -
அங்கம் குறைந்தவர்களுக்கும், பெண்களுக்கும், வறியவர்க்கும் அளிப்பது
அதம தானம் -
அன்பு, புகழ், கண்ணோட்டம், அச்சம், கைமாறு, இன்னும் மற்ற காரணங்களுக்காக் அளிப்பது.
குணம் -
சாத்துவீகம் -
ஞானம், தவம், மெய்ம்மை, மேன்மை, அருளுடமை, ஐம்புலனடக்கல்
இராசம் -
தானம்,தவம்,மெய்ம்மை,தருமம் பேணல்,ஞானம்,கல்வி,கேள்வி
தாமதம் -
பேருண்டி,ஒடுங்கல்,சோம்பல், காமம், நீதிகேடு, நித்திரை, மறதி, தணியாக் கோபம், வஞ்சம்.
உயிர்த்தீ - உதராக்கினி, காமாக்கினி, கோபாக்கினி.
மொழி - பழித்தல், புகழ்தல், மெய்கூறல்.
சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி.
குற்றங்கள் - காமம், வெகுளி, மயக்கம்.
உலகம் - பூமி, அந்தரம், சுவர்க்கம்.
தொழில் - படைத்தல், காத்தல், அழித்தல்.
காலம் - இறந்த காலம், எதிர் காலம், நிகழ் காலம்.
பொறி - வாக்கு, காயம், மனம்.
பிறப்பு - உம்மை, இம்மை, மறுமை.
பாவபுண்ணிய பழக்கங்கள் - செய்தல், செய்வித்தல், உடன்படல்.
நாடிகள் - வாத, பித்த, சிலேத்துமம்.
நான்கு :
உபாயங்கள் - சாமம், பேதம், தானம், தண்டம்.
புண்ணிய தோற்றம் - தவம், ஒழுக்கம், கொடை, கல்வி.
பெண்டிர் குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு.
ஆடவர் குணம் - அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி
இழிச்சொல் - குறளை, பொய், கடுஞ்சொல், பயனிலசொலல்.
கதி - தேவர், மானுடர், விலங்கு, நரகர்.
ஐந்து :
துரக கதி - மல்லகதி, மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி.
உணவு - கடித்தல், நக்கல், பருகல், விழுங்கல், சுவைத்தல்.
பூதங்கள் - நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.
வேள்விகள் - தேவயாகம், பிரமயாகம், பூதயாகம், பிதிர்யாகம், மானுடயாகம்.
தொழில்கள் - எண்ணல், எழுதுதல், இலைகிள்ளல், மலர்தொடுத்தல், யாழ் வாசித்தல்.
அவத்தைகள் - சாகிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்.
வினாக்கள் - அறியான் வினாவல், அறிவொப்புக்காண்டல், ஐயந்தீர்தல், அவனறிவுதான் கோடல், மெய்யவற்க்குக் காட்டல்.
கர்ம இந்திரியங்கள் - வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபஸ்த்தம் (உபத்தம்).
கர்ம இந்திரிய விடயங்கள் - வசனம், கர்மம், கமனம், விசர்ஜனம், ஆநந்தம்.
ஞான இந்திரியங்கள் - துவக்கு, சக்ஷு, சுரோத்திரம், ஜிஹ்வை, ஆக்கிராணம்.
தன் மாத்திரைகள் - சப்த, பரிச, ரூப, ரச, கந்தம்.
அந்தக் கரணங்கள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம், உள்ளம்.
வாயுக்கள் - பிராணண், அபானன், வியனன், உதானன், சமானன்.
உப வயுக்கள் - நாகன், கூர்மன், க்ருகரன், தேவதத்தன், தநஞ்சயன்(தனஞ்சயன்).
ஆச்ரயங்கள் - அமராச்சரயம், விபஜனாச்ரயம், ஜலாச்ரயம், மலாச்ரயம், சுக்கிலாச்ரயம்.
கோசங்கள் - அன்னமயம், பிராணமயம், மனோமயம், விக்ஞானமயம், ஆநந்தமயம்.
ஆறு :
வேதாங்கம் : சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதம், சோதிடம்.
உட்பகைகள் : காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்.
புறச்சமயங்கள் : உலோகாதயம், பெளத்தம், ஆருகதம், மீமாஞ்சம், மாயாவாதம், பாஞ்சராத்திரம்.
அகச்சமயங்கள் : சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம்.
ஏழு :
நாட்டுக்கு வரும் குற்றங்கள் : விட்டில், தொட்டியர், பன்றி, கள்வர், அவமழை, யானை, கிளி.
முனிவர் : அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன்,
காசிபன்,மார்க்கண்டன்.
நரகம் : கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி.
கீழுலகம் : அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதால(ள)ம்.
மேலுலகம் : பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம்,மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்.
கடல் : உப்புக்கடல், கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல்,
தயிற்க் கடல், பாற்க் கடல், சுத்த நீர்க் கடல்.
திரைகள் :
கருப்பு - மாயா சக்தி
நீலத்திரை - கிரியா சக்தி
பச்சை - பரா சக்தி
சிவப்பு – இச்சா சக்தி
பொன்வண்ணம் - ஞான சக்தி
வெண்மை - ஆதி சக்தி
கலப்பு - சிற்சக்தி
பிறப்பு :
ஐந்து மாதம் வரை – குழவிப் பருவம்.
அவயவங்கள் உற்பத்திக் காலம்.
பிண்டம் வெளிப்பட்ட காலம்.
குழந்தைப் பருவம்.
பாலப் பருவம்.
குமரப் பருவம்.
முதுமைப் பருவம்.
இதில் சூட்சமப் பிறப்பு 7 :
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, சாக்கிரத்தில் சொப்பனம்,
சாக்கிரத்தில்சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி.
காரணப் பிறப்பு - மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம்
தாதுக்கள் : இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலமாகிய விந்து.
எட்டு :
சித்திகள் : அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம்,
ஈசத்துவம், வசித்துவம்.
யோகாங்கம் : இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம்,
தியானம், தாரணை, சமாதி.
தருமாங்கம் : அறமையப் படாமை, விருப்பமின்மை, வெறுப்பின்மை, மயக்கமின்மை, பழியை நீக்கல், அழிந்தோரை நிலை நிறுத்தல், அறுசமயத்தோர்க்கு அன்பு, அறம் விளக்கல்.
மெய்ப்பரிசம் : தட்டல், பற்றல், தடவல், தீண்டல், குத்தல், வெட்டல், கட்டல், ஊன்றல்.
உடற்குறை : குறள், செவிடு, மூங்கை, கூன், மருள்(அலி), குருடு, மா(விலங்கு உறுப்புடையது),உறுப்பில்லாப் பிண்டம் (ஊனமுற்றது).
ஒன்பது :
தாரணை : நாம தாரணை,மாயா தாரணை,வச்சிர தாரணை, சித்திர தாரணை, சத்த தாரணை, வத்து தாரணை, சதுரங்க தாரணை, செய்யுள் தாரணை, எண்பொருட்டாரணை(நினைவு,குறைவு ஆகிய).
பெரியோருக்குச் செய்யும் புண்ணியம் : எதிர்கொளல், பணிதல், ஆசனத்திருத்தல், கால் கழுவல், அருச்சித்தல், தூபங்காட்டல், தீபங்காட்டல், துதித்தல், அமுதூட்டல்.
மேற்க்கண்டவற்றிற்கு நூலாதாரம் என் அப்பன் அபுதுல் காதிரு (காதில்+இரு) பாச்சா, என் பெரியப்பன் சிதம்பரம் இராமலிங்கம், என் பாட்டன் தணிகை பிரான் முகமது சாலிகு அவர்களின் கூற்றுக்கள்.
Thursday, December 27, 2007
எண்ணும் எழுத்தும்
Posted by ஞானவெட்டியான் at 12:48 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment