Thursday, November 09, 2006

கந்தர் கலிவெண்பா - 6

கந்தர் கலிவெண்பா
***********************

6.துருவு மருவு முருவருவு மாகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முக்தியளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்

துருவு மருவு முருவருவு = உருவம், அருவம், அருவுருவம்
பருவ வடிவம் = அடியார் மனப்பக்குவத்திற்கேற்ற திருமேனி
இருள்மலம் = ஆணவ மலம்
மோகம் = மயக்கம்
மலபாகம் = மலங்கள் நீங்கும் நிலை(பக்குவம்)
தேகமுற = உருவெடுக்கும்படி

ஆதிமுதலாகிய ஒரு வடிவத்திலே நின்று,உருவம், அருவம், அருவுருவம் என மூன்று வடிவங்களாகி(அடியாருக்கு அவர்தம் மனப்பாங்குக்கு ஏற்றவாறு வெளிப்படும்) பெரிய வடிவங்கள் பலவற்றை உடையவனே! அறியாமைக்குக் காரணமான பாசத்துள் உழன்று மயக்கத்தில் முழுகியுள்ள எல்லா உயிர்களுக்கும் வீடுபேற்றைத் கொடுப்பதற்கேற்றபடி, அந்தப் பாசங்கள் நீங்கத் திருவருள் வைப்பவனே!

3 Comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.ஐய்யா. பாக்கி பதிவுகளையும் படித்துவிட்டு பிறகு வருகிறென்

தி. ரா. ச.(T.R.C.) said...

எளிமையாக விளக்கியுள்ளீர்கள்.ஐய்யா. பாக்கி பதிவுகளையும் படித்துவிட்டு பிறகு வருகிறென்

ஞானவெட்டியான் said...

அன்பு திராச,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி