7.தந்த வருவுருவஞ் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்திரமுதல்
ஆறத்து வாவுமண்டத் தார்ந்தஅத்து வாக்களுமுற்
கூறத்தகுஞ் சிமிழ்ப்பிற் கூட்டுவித்து - மாறிவரும்
விந்து = சுத்த மாயை
மோகினி = அசுத்த மாயை
மான் = பிரபஞ்ச மாயையாம் பிரகிருதி
பெந்தம் = பந்தம், கட்டு
மந்திரமுதல் = மந்திரம் முதலியன
ஆறத்துவா = ஆறு வழிகள் = மந்திரம், பதம், வர்ணம், புவனம், ததுவம், கலை
சிமிழ்ப்பு = பிணைப்பு
மாறிவரும் = மாறிமாறி வருகின்ற
உயிர்கள் உடலெடுக்க உருவமும், உருவற்றதுமான சுத்த மாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை ஆகியற்றவற்றை உயிர்களோடு சேர்ப்பித்து, அவற்றோடு சேர்ந்த உயிர்கள் செல்லுதற்குரிய மந்திரம், பதம், வர்ணம், புவனம், ததுவம், கலை என்னும் ஆறு வழிகளையும், பதிநான்கு உலகிலுள்ள மற்ற வழிகளையும் இணைத்து மாறிமாறி வருகின்ற.......
Tuesday, November 14, 2006
கந்தர் கலிவெண்பா - 7
Posted by ஞானவெட்டியான் at 12:25 PM
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment