Thursday, October 19, 2006

ஆய்வுக்காக

ஆய்வுக்காக
****************
மதுமிதாவின் வலைபூ ஆய்வுக்காக :

என்னைப்பற்றி!
*****************
வலைப்பதிவர் பெயர்: ஞானவெட்டியான்

இயற்பெயர் : அ.நட.ஜெயச் சந்திரன்

வலைப்பூ பெயர் : ஞானவெட்டியானின் ஞானவேள்வி

சுட்டிகள்(url) :
http://njaanavelvi.blogspot.com/
http://ammaiaayiram.blogspot.com/
http://aranaayiram.blogspot.com/
http://anumanthuthi.blogspot.com/
http://vendal.blogspot.com/
http://njaanakkural.blogspot.com/
http://njaanamuththukkal.blogspot.com/
http://thaahipirabam.blogspot.com/
http://sivavakkiyar.blogspot.com/
http://kuravanji.blogspot.com/
http://sinthaamani.blogspot.com/
http://njaanametti.blogspot.com/
http://pirabulingaleelai.blogspot.com/
http://maaliyam.blogspot.com/
http://thiruvaasakam.blogspot.com/
http://kkvenpa.blogspot.com/
http://vaiyyam.blogspot.com/

பிறந்த மண் - தொண்டை மண்டல புதுக்கோட்டை

தங்கல் - புகுந்த மண் - திண்டுக்கல், தமிழகம் , இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: யாரும் இல்லை

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 10-09-2005

இது எத்தனையாவது பதிவு: 448

இப்பதிவின் சுட்டி- http://njaanavelvi.blogspot.com/2006/05/30.html

வலைப்பூ துவங்கிய காரணம்:
*******************************
ஞானக் கருவூலங்களையும், வழக்கிழந்த தமிழக் காவியங்களையும் இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல .

கிட்டிய அனுபவங்கள்: "ஏன் இந்த வம்பு?"

பெற்ற நண்பர்கள்: ஒத்த கருத்துடைய ஒரு சிலரே!

கற்றவை:
**********
தற்பொழுதுதான் துவக்கம். இருப்பினும் வேறு வகையில் காலத்தைச் சிலவிட்டிருக்கலாம்.

எழுத்தில் கிட்டிய சுதந்திரம்:
******************************
ம்...ம்....ம்.... உண்டு; ஆயினும் மனதில் உள்ளவைகளை எல்லாம் பதிய இயலவில்லை.

அடுத்து செய்ய நினைப்பது : ஆய்ந்து கொண்டிருக்கிறேன்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: வலைப்பதிவின் முதல் இடுகையில் உள்ளது.

வலைப்பதிவர்களின் கருத்து: வேலையற்றவன்

சொல்ல நினைப்பது:
************************
எதிர்மறைக் கருத்துக்களை எடுத்து இயம்பும் பாங்கு மாறவேண்டும். அடுத்தவர் மனம் புண்படாவகையில் இருத்தல் வேண்டும். வாழ்க்கைக்குப் பயனுள்ளவைகளுக்கு முன்னுரிமை தந்து பயனற்றவற்றைப் புறந்தள்ளுதல் இன்றியமையாதது; காலத்தின் கட்டாயம்.

என் கருத்து:
**************
"கடை விரித்தேன்; கொள்வாரில்லை". எதுவும் இலவசமாகவும் எளிதாகவும் கிட்டிவிட்டால் மவுசு இருக்காதே!

12 Comments:

Anonymous said...

நன்றி ஐயா
அம்மா நலம் தானே

வலைப்பூ பெயருக்கு கீழே
உங்கள் அனைத்து வலைப்பூக்களின் பெயரும்,சுட்டியும் சேர்த்துவிடுங்கள்

Anonymous said...

தாங்கள் விரிக்கும் கடையில் விருந்துண்ணும் அன்பர்களில் அடியேனும் உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா!
- பாசிடிவ்ராமா
(நம்பிக்கை குழும வலைப்பூவில் இருந்து)

Anonymous said...

அய்யா,

சில சமயங்களில் என் போன்றோருக்கு நல்ல விசயங்களை புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுவிடுகிறது.

நிச்சயம் உங்கள் பதிவுகள் பல பேரிடம் சென்றடையும்.

வணங்குகிறேன்.

நன்றி.

Anonymous said...

ஐயா,
//கடை விரித்தேன் கொள்வாரில்லை". //
அவ்வாறு எண்ணவேண்டாம், என்னை போல் உங்கள் பதிவை நாள் தவறாமல் படித்து வருபவர் பலருண்டு.

Anonymous said...

பெரிய ஞானி ஐயா,

தங்கள் பதிவை படித்து மிகவும் மனம் நொந்தேன்.உங்கள் மனதின் வேதனையை அறிய முடிகிறது.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.மீண்டும் பதிவிட வாருங்கள்.சிறியோர் நாங்கள்.அறிந்தும் அறியாமலும் உங்கள் மனதை புண்படுத்தி இருப்போம்.எங்கள் பிழை பொறுத்து தாங்கள் மீண்டும் வரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்

ஞானவெட்டியான் said...

அன்பு மகளே மது,
அனைவரும் நலமே. இல்லத்தில் அனைவரும் நலமா?
//வலைப்பூ பெயருக்கு கீழே
உங்கள் அனைத்து வலைப்பூக்களின் பெயரும்,சுட்டியும் சேர்த்துவிடுங்கள்//

சற்றே விளங்குமாறு சொல்லித் தந்தால் செய்துவிடுகிறேன்.

ஞானவெட்டியான் said...

அன்பு இராமா,
நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு சிவபாலன்,
மிக்க நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு சிவமுருகன்,
என் கடைக்குத் தினமும் வருகை புரிந்தமைக்கு நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு செல்வன்,
தங்களின் கரிசனத்துக்கு நன்றி.
//அறிந்தும் அறியாமலும் உங்கள் மனதை புண்படுத்தி இருப்போம்.எங்கள் பிழை பொறுத்து தாங்கள் மீண்டும் வரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்//
விரைவில் வருகிறேன்.

Anonymous said...

ஐயா

நீங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது போய்
விளங்குமாறு நான் சொல்வதா

உங்களின்
////ஞானவெட்டியானின் ஞானவேள்வி
அம்மை ஆயிரம்
அரன் ஆயிரம்
அநுமன் துதி
வேண்டல் 108
ஞானக் குறள்
ஞானமுத்துக்கள்
தாகி பிரபம்
சிவவாக்கியர் பாடல்கள்
ஞானரத்தினக் குறவஞ்சி
விவேக சிந்தாமணி
ஞானம் எட்டி
பிரபுலிங்க லீலை
காணாபத்தியம்
மாலியம்
திருவாசகம்
கந்தர் கலிவெண்பா
வையம்////

இந்த மொத்த வலைப்பூக்களின் சுட்டியையும்

இந்தப்பதிவில்
//
வலைப்பூ பெயர் : ஞானவெட்டியானின் ஞானவேள்வி

சுட்டி(url) : http://njaanavelvi.blogspot.com/

// என கொடுத்துள்ளீர்கள் அல்லவா
அதற்கு கீழே கொடுத்து விடுங்கள்.

அல்லது குமரன் கொடுத்தது போல் கொடுங்கள் ஐயா

http://koodal1.blogspot.com/2006/05/196_25.html

ஞானவெட்டியான் said...

தந்துவிட்டேன் அம்மா.