5. கருவின்றி நின்ற கருவா யருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவர் மிச்சை யறிவியற்றலா லிலய
போக வதிகாரப் பொருளாகி - யேகத்
திரிகரணம் = மனம், வாக்கு, காயம்(உடல்)
ஆகவரும் = போல் அமைந்த
இச்சை = விருப்பம்
அறிவு = ஞானம்
இயற்றல் = செயல்
இலயம் = ஒடுக்கம்
போகம் = பாதுகாப்புத் தொடக்கம்
அதிகாரம் = விரிவு
ஏகத்து = ஒன்றாய்
தனக்கு ஒரு முதல் காரணம்(கருவாகிய வித்து) இல்லாமல், தானே முதற் காரணமாகச் சார்ந்து நிற்பவனே! மாயா உருவம் இல்லமல், அருளே திருமேனியாக உடையவனே! மூன்று கருவிகளாகிய விருப்பம், அறிவு, செயல் என்ற மூன்றினால், எல்லாவற்றையும் ஒடுக்கும் பொருளாகியும், பாதுகாக்கும் பொருளாகியும், உண்டாகும் பொருளாகியும் நிற்பவனே!
Thursday, October 19, 2006
கந்தர் கலிவெண்பா - 5
Posted by ஞானவெட்டியான் at 7:50 PM
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம், ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment