2.அந்தங் கடந்தநித் தியானந்த போதமாய்ப்
பந்தந் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்குஞ்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்(கு)
நித்தியானந்தம் = நித்திய (நிலைத்த) ஆனந்தம்
பந்தம் = (வினைப்) பாசம்
தணந்த = இயல்பாக நீங்கிய
குறி = பெயர்
கோலம் = வடிவு, அழகு, உருவம்
அற்று = இல்லாது
அறிவுக்கு = உயிரின் அறிவுக்கு
முதல், நடு, முடிவு ஆகியவை இல்லாத, என்றும் நிலைத்த இன்ப அறிவுடையவனே! கட்டுப்பாடு இல்லாத மேலான ஒளி மயமானவனே! அன்பருக்கு அருள் புரிய வந்த, பெயரும், குணங்களும், உருவுமில்லாமல், எங்கும் பரம சிவமாய் (சீவனாய்) நிறைந்திருக்கும் மேலான மங்கலப் பொருளே!
Thursday, October 19, 2006
கந்தர் கலிவெண்பா - 2
Posted by ஞானவெட்டியான் at 7:45 PM
Labels: கந்தர் கலிவெண்பா, செளமாரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment