526.மகன் செத்தாலும் சரி; மருமகள் கொட்டம் அடங்க வேண்டும்
527.மதி இல்லா விண்ணானேன்; மருந்து இல்லா புண்ணானேன்.
528.மனம் போல மாங்கலியம்
529.மனைவி இல்லாதவன் அரை மனிதன்
530.மரம் வைத்தவன் தண்ணி ஊத்துவான்
531.மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
532.மறைவிலே பெண்டாட்டி; மந்தையிலே அக்கச்சி.
533.மலை போல் வந்தது பனிபோல் விலகியது
534.மழைவிட்டும் தூவானம் விடாததுபோல்
535.மாடு மேய்க்கவும் வேணும்; மச்சினனுக்குப் பெண் பார்க்கவும் வேணும்.
536.மாமியா உடைச்சா மண் குடம்; மருமகள் உடைச்சா பொன் குடம்.
537.மாமியார் சாகாளோ? மனக் கவலை தீராதோ?
538.மாமியார் செத்த ஆறாம் மாதம் மருமகன் கண்ணில் நீர் வந்ததாம்
539.மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
540.முடக் குதிரைக்குச் சறுக்கினதுதான் சாக்கு.
541.முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
542.முலை கொடுத்து வளத்தவள் மூதேவி; முந்தானை போட்டவள் சீதேவி.
543.முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
544.முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்
545.மூக்குள்ளவரை சளி போகாது.
546.மேயிற மாட்டை நக்கற மாடு கெடுக்கும்
547.மொட்டச்சிக்குத் தகுந்த மூக்கறையன்
548.மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
Saturday, February 07, 2009
பழமொழி 600
Posted by ஞானவெட்டியான் at 5:57 PM
Labels: பழமொழி 600
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment