Saturday, February 14, 2009

பழமொழி நானூறு - 5

ப‌ழ‌மொழி நானூறு - 5
******************************

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்.



ஆற்றுணா - வழியி உண்ண உணவு

மிகுதியும் கற்கவேண்டிய நூல்களை ஐயமின்றிக் கற்று அறிந்தோர்களே அறிவுடையர் எனப்படுவர். அவ்வறிவு படைத்தோரின் புகழ் நான்கு திசைகளிலும் பரவாத நாடுகள் இல்லை. அதனால் அந்த நாடுகள் எல்லாம் வேற்று நாடுகள் இல்லை; அவ்வறிவு உடையோரின் நாடுகள்தாம். அப்படியானால், எந்த நாட்டுக்குச் சென்றாலும் வழியில் உண்ண உணவு(வழியிடையமுது) கொண்டு செல்ல வேண்டியதில்லை.

பழமொழி
*********
"கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு."
"அறிவுடை யொருவனை அரசனும் விரும்பும்."

0 Comments: