4.விளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்
துளக்கமின்று என்றனைத்தும் தூக்கி விளக்கு
மருள்படுவதாயின் மலைநாட என்னை
பொருள்கொடுத்துக் கொள்ளார் இருள்.
விளக்கு - உண்மை நிலையை விளக்குவதால் இப்பெயர் பெற்றது.
துளக்கம் - அசைவு - பொருள் நிலை வேறுபாடு
மலை நாட்டை உடையவனே! விளக்கிற்கு வேண்டிய நெய் முதலிய பொருட்களை விலை கொடுத்து வாங்குவது அது இருளைப் போக்கும் என்னும் தன்மையை ஆராய்ந்தேயாகும். விளக்கு தெளிவாகக் காட்டாது தானே மழுங்குதலைச் செய்தால் பொருள் கொடுத்து வாங்கியதன் பயன் என்ன? ஆதலினால், பொருள் கொடுத்து இருளை வாங்கமாட்டார்கள்.
பழமொழி
**********
"பொருளைக் கொடுத்துக் இருளைக் கொள்ளார்"
விளக்கைப் போன்ற குருவின் உதவியால் ஞான நூல்களைக் கற்கவேண்டும்.
புறநானூறு
**********
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"
Friday, February 13, 2009
பழமொழி நானூறு - 4
Posted by ஞானவெட்டியான் at 10:28 AM
Labels: பழமொழி நானூறு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment