127.பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம்
நண்பிலரைக் கண்டக்கானாற்காலி - திண்புவியை
ஆள்வார் மதுரை யழகிய சொக்கர்க் கரவம்
நீள்வாகன நன்னிலம்.
பறவை - ஈ(கொடு)
இலக்கம் - அஞ்சு(பயப்படு)
நாற்காலி - விலங்கு(விலகல்)
திண்புவி - வலிமிகுந்த உலகு
நற்குணமுள்ளவர்கட்குக் கொடு. பாவச் செயலுக்கு அஞ்சு. நண்பர் இல்லாதோரைக் கண்டால் விலகு. வலிமிகுந்த உலகை ஆளும் மதுரை சொக்கருக்குப் பணிவிடை செய்.
Thursday, February 12, 2009
விவேக சிந்தாமணி - 127
Posted by ஞானவெட்டியான் at 4:23 PM
Labels: விவேக சிந்தாமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment