Saturday, December 27, 2008

பிரபுலிங்க லீலை - 2.34

நாராயணர் கூட்டம் வருதல்
*********************************
2.34 சங்க மொன்றுடன் ஒன்றுதாக் குறவொளி தழைக்குந்
துங்க நேமியும் அன்னவா யுறவலை சுருட்டும்
பொங்கு வேலைவந் தெனவரிக் கணங்களற் புதத்த
எங்கள் நாயகன் பேரவை யிடத்துவந் திறுத்த.

சங்கம் - சங்கு.
ஒளி தழைக்கும் - ஒளிபெருகும்.
துங்கநேமி - உயர்வினையுடைய ஆழி.
அன்னவாய் உற - அப்படியே நெருக்கமாகப் பொருந்த.
பொங்குவேலை - பொங்குகிற கடல்.
அரிக்கணங்கள் - நாராயணர்களின் கூட்டம்.
அற்புதத்த - வியக்கத்தக்கபடி.
வந்து இறுத்த - வந்து தங்கின.

சங்கும் ஒளிவீசும் வினை போக்கும் சக்கரமும் கொண்டு வலை வீசும் பொங்கு கடலில் பள்ளி கொண்ட எம்பெருமாளின் அடியார்கள் வியக்கத் தக்கவாறு எம்பெருமானாம் சிவனின் பேரவையில் வந்து தங்கின.

0 Comments: