Sunday, December 09, 2007

குறவஞ்சி(36 - 40)

36.சித்த னொளிவு கலந்திட மெவ்விடஞ் சிங்கி? - அது
அத்தன் நடனந்தா னாடிய தற்பரஞ் சிங்கா!

சித்தத்தின் ஒளி எந்த இடத்தில் கலக்கும் சிங்கி?
அது சீவன் நடனமாடும் சிதாகாயம் சிங்கா!

37.உத்தமப் பொருளுக்கு உயிரெழுத் தென்னடி சிங்கி? - அது
நச்சர வாடும் நடுநிலை யல்லவோ சிங்கா!

உயிரெழுத்து = உயிர்நிலை
நச்சு அரவு = குண்டலினிப் பாம்பு

சீவனாகிய உத்தமப் பொருளுக்கு உயிர்நிலை எங்கேயடி சிங்கி?
அது (நச்சு அரவு) குண்டலினிப் பாம்பு ஆடுகின்ற நடுவிடமே சிங்கா!

38.எட்டெழுத் தாக எழுந்தெழுத் தென்னடி சிங்கி? - அது
மட்டி லடங்கா வடிவட்டகோணமே சிங்கா!

"அ" தமிழ் எண்ணிக்கை எட்டைக் குறிக்கும்.
இங்கே கெதியான(மூச்சான) "உம்" எழுத்து மவுனமாச்சு.

“அ”எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி

சுழித்தல் - குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை.
இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.

விசிரிம்பித்தல் - சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.

மடித்து மேலேறுதல் - வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது
காளிசக்தி. இது வாயு சக்திதான்.

அங்கேருந்து கீழே வருகிறோம் - அதன் பெயர் கலவி கரணி. அப்படின்னா
ஆகாயசக்தி - இதுக்கு ஈசன் பீமர்.

அப்படியே மேலேத்துறோம். அது பலவி கரணி. அது என்னான்னா,
சந்திரன்கிட்டேயிருந்து பலத்தை விளைவிக்கும் சக்தி.

கோட்டுக்கு மேலே போயிட்டமா? சரி கீழே இறங்குகிறோம்.
அது கீழ்தாழல் - பலப்பிரமதனி - சூரியனிடம் பரவியிருக்கும் சிவசக்தி.- அதிபதி - உக்கிரர்.

கீழே இறங்கி நடுவில் கொஞ்சம் மூச்சு வாங்குறோம். அங்கே நடுவிலே
ஒருகுத்து. அது செங்குத்துக் கோட்டின் மையம். அது சர்வபூத தமனி.

தமனிஎன்றால் வன்னி மரம். அது அக்கினி. சர்வபூதமென்றால் ஐம்பெரும்
பூதங்களாகிய, நிலம், நீர், மண், காற்று, ஆகாயமாம். இந்த இடத்தில்தான்
எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்.

வரிவடிவாதல் - மனோன்மணி - மையப் புள்ளியிலிருந்து நேரா கீழிறங்கினால்
“அ”வாகிவிடும். இதுதான் சர்வசக்தி.

ஆக “அ”காரமே சர்வ சக்தி. விந்து சக்தி.

“அ”காரம் 12 பிரிவுகளாம்.

1.விந்து - சூரிய ஒளி
2.நாதம் - பெரிய நாதம்
3.பரவிந்து - சந்திர ஒளி
4.பரநாதம் - நாதம்
5.அபரவிந்து - நற்சேத்திர ஒளி
6.அபரநாதம் - நாதம்
7.திக்கிராந்தம் - அருகிய ஒளி, மின்னல்
8.அதிக்கிராந்தம் - ஒலி
9.வாமசத்தி
10.ஜேஸ்டசத்தி
11.ரெளத்திர சத்தி
12.காளி சத்தி
எட்டு எழுத்தாக எழுந்த எழுத்து என்னடி சிங்கி?
மட்டில் அடங்காத ஓம் எனும் ஓங்கார வட்டமாம் சிங்கா!

39.அஞ்செழுத் தாக அமைந்தெழுத் தென்னடி சிங்கி? - அது
அஞ்சும் பொருந்திய ஆகாச வட்டமே சிங்கா!

"நமசிவய" ஆகிய ஐந்து எழுத்துக்கள். இவை ஐந்தும் சேர்ந்ததுவே (சிதா)காயமாம்.

40.அன்பத்தோ ரட்சரம் அறிய நீ சொல்லடி சிங்கி? - அது
வஞ்சு மகார நடுச்சுழி மூன்றுமே சிங்கா!

அம்பத்தோரு அட்சரம் என்னவெனச் சொல்லடி சிங்கி.
அது ஐந்து பூதங்களாலான அகாரத்தின் மூன்று நடுச்சுழிகளாம்.

2 Comments:

வடுவூர் குமார் said...

ஒரு "அ" வினுள் இவ்வளவு சங்கதியா?
நன்றி.

ஞானவெட்டியான் said...

சங்கமமாகும் கதி(மூச்சோட்டம்)யே "அ"தானே!