அநுமன் துதி - 3
*****************
ஓம் உயிர்ப்பின் மைந்தா போற்றி
ஓம் ஊழி கடந்தவனே போற்றி
ஓம் எப்பவும் இராமா என்றிடும் தேவா போற்றி
ஓம் ஐம் புலன் அடக்கினவனே போற்றி
ஓம் கங்கையில் நடந்தவனே போற்றி
ஓம் கடல் கடந்தாய் போற்றி
ஓம் கடிகையில் அமர்ந்தவனே போற்றி
ஓம் கணையாழி ஈந்தவா போற்றி
ஓம் கணகண கண்டாமணி நாதனே போற்றி
ஓம் கதாயுதபாணியே போற்றி
ஓம் காமனை வென்றவனே போற்றி
ஓம் காலநேமி அழித்தவனே போற்றி
ஓம் காலத்தை வென்றவனே போற்றி
ஓம் கிரீட குண்டலனே போற்றி
ஓம் கிட்கிந்தை வாழ்ந்தவனே போற்றி
ஓம் கோடை இடிக் குரலோனே போற்றி
ஓம் கோள் துயர் நீக்கும் கோமகனே போற்றி
ஓம் கேதுவை அடித்தவனே போற்றி
ஓம் கேசரி மைந்தா போற்றி
ஓம் சக்தியின் இருப்பிடமே போற்றி
ஓம் சஞ்சிதம் களைபவனே போற்றி
ஓம் சஞ்சீவி மலை கொணர்ந்தவனே போற்றி
ஓம் சத்திய உருவே போற்றி
ஓம் சர்வ ரோகம் தீர்ப்போனே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சீதாராமனை நெஞ்சில் காட்டியவனே போற்றி
ஓம் செங்கமலக் கையுடையவனே போற்றி
ஓம் செந்தூர நெற்றி உடையவனே போற்றி
ஓம் சொல்லின் செல்வா போற்றி
ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி
ஓம் சுடர் ஒளித் திருவே போற்றி
Wednesday, December 26, 2007
அநுமன் துதி - 3
Posted by ஞானவெட்டியான் at 11:21 AM
Labels: அநுமன் துதி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment