ஞானரத்தினக் குறவஞ்சி (31 - 35)
*****************************************
31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? - அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா.
எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி?
அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா!
32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி - இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா!
எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி?
அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா! (கன்ஸூல் மஹபியா)
33.ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி? - அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ சிங்கா!
ஆங்காரம் நிறைந்த உடலுக்கு ஆதாரம்(ஆணி) என்னடி சிங்கி?
அது பிரணவமாம் ஓங்கார மூலத்தின் உள்ளே இருக்கும் ஒளியே சிங்கா!
34.ஆணியாய் வந்த அரும்பொரு ளென்னடி சிங்கி? - அது
தோணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா!
ஆதாரமாய் வந்த அரும்பொருள் என்னடி சிங்கி?
தோன்றிய சற்குருவின் முதல் பெயரல்லவோ(சீவ) சிங்கா!
35.இந்தப் பொருள் வந்த தெந்த வழியடி சிங்கி? - அது
அந்தக் கதிமதி வந்த வழியடா சிங்கா!
கதி = பிறப்பு; மதி = அறிவு.
இந்த சீவன் வந்தது எந்த வழியடி சிங்கி?
அந்த அறிவு பிறந்து வந்த வழியடா சிங்கா!
Thursday, October 19, 2006
ஞானரத்தினக் குறவஞ்சி (31 - 35)
Posted by ஞானவெட்டியான் at 9:27 PM
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
You could easily be making money online in the underground world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]clickbank blackhat[/URL], Don’t feel silly if you don't know what blackhat is. Blackhat marketing uses alternative or not-so-known ways to build an income online.
//Blackhat marketing uses alternative or not-so-known ways to build an income online.//
I feel silly to earn money without working & Pl note that money is not alone enough to lead a peaceful life.
Post a Comment